Thursday 21 February 2013

அன்புள்ள நண்பர்களே, பைபிள் என்ற கிறிஸ்துவ வேதாகமம் பலமுறை திரும்பத்திரும்ப படித்துள்ள நான் அதை புதிய தமிழில் எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. அதன் முயற்சியே இது. நேரம் கிடைத்தால் நீங்களும் படித்துப் பாருங்களேன்?

ஆதியாகமம்

1 அத்தியாயம்

1. துவக்கத்திலே கடவுள் விண்வெளியையும் உலகையும் படைத்தார்....

2. உலகம் ஒழுங்கு இல்லாமல் வெறுமையாக இருந்தது. அதன்மேல் இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் நீரலைகளில் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3. வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் கடவுள். உடனே வெளிச்சம் உண்டானது

4.வெளிச்சம் நல்லது என்று கடவுள் கண்டார்.வெளிச்சத்தையும் இருளையும் அவர் வெவ்வேறாகப் பிரித்தார்

5. வெளிச்சத்தைப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதல் நாள் ஆனது.

6. பின்பு கடவுள் : நீரின் மத்தியில் ஆகாயவிரிவை உண்டுபண்ணி அது நீரை பிரிக்கக்கடவது .என்றார்.

7. கடவுள் அந்த ஆகாயவிரிவுக்கு மேலேயும் கீழேயும் உள்ள நீருக்குள் பிளவை உண்டுபண்ணினார்.

8. ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார். மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆனது..

9. பின்பு கடவுள், வானத்தின் கீழேயுள்ள நீர் ஓரிடத்தில் சேரவும் வேட்டாந்தரை காணப்படக் கடவது என்றார்: அது அப்படியே ஆனது.

10. கடவுள் அந்த வெட்டாந்தரைக்கு பூமி என்றும் ஒன்று சேர்ந்த நீருக்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். ( தொடரும் )
 
ஆதியாகமம்

1 அத்தியாயம்

11. அப்பொழுது கடவுள் : நிலமானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும்,நிலத்தின்மேல் விதைகளைக் தரக்கூடிய பலதரப்பட்ட கனிமரங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்.: அது அப்படியே ஆயிற்று.

12. நிலம் புல்லையும், தங்கள் தங்கள் இனத்தின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் இனத்தின்படியே விதைகளையுடைய கனிகளைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது.: கடவ...ுள் அது நல்லது என்று கண்டார்.

13. மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

14. பின்பு கடவுள்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது , அவை அடையாளங்களாகவும், காலங்களையும், நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்..

15. அவைகள் உலகின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று .

16. கடவுள், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் , விண்மீன்களையும் உண்டாக்கினார்.

17. அவைகள் உலகின்மீது ஒளிவீசவும்,

18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், கடவுள் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; கடவுள் அது நல்லது என்று கண்டார்.

19. மாலையும் காலையுமாகி நாலாம் நாள் .ஆயிற்று.

20. பின்பு கடவுள்: நீந்தும் உயிர்வகைகளையும், வானில் பறக்கும் பறவைகளையும், நீரிலும் வானிலும் பெருகக்கடவது என்றார்.

( தொடரும் )





 

No comments:

Post a Comment