Thursday 25 October 2012

எனது அகப்பக்கத்தில் தமிழ்...

------------------------------------------------

இதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.

இத்தனை காலமாக தமிழில் எழுதுவது முடியாமல் இருந்தது. பலரிடம் கேட்டும் பலன் இல்லாமல் போனது.

திடீரென்று சென்ற வாரம் அது நிறைவேறியது. நடந்த இடம் குளுவாங் புனித லூயிஸ் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதவியவர் என் நண்பர் ஆ.வி. டேவிட். இவர் அந்த ஆலயத்தின் முக்கிய உறுப்பினர். சில வாரங்களுக்குமுன் அவருக்கு திண்ணையில் பின்னூட்டம் எழுத சொல்லித்தந்தேன். அப்போது அவருடைய புது மடிக்கணினியில் தமிழ் இல்லை. எனக்கும் அவ்வாறே நிலைதான். நான் அவருக்கு ஆங்கிலத்தில்தான் எழுத சொல்லித்தந்தேன். அவர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி திண்ணைக்கு அனுப்பிகொண்டிருந்தார்.

நான்கூட இவ்வாறு ஆங்கிலத்திலேயே திண்ணையில் பின்னூட்டங்கள் எழுதியதால் பல பிரச்னைகள் எழுந்தன. ஒரு சிலர் அதை ஆட்சேபித்தனர். நான் திண்ணை நிர்வாகத்தினருக்கு என் நிலைமையை விளக்கி அனுமதி பெற்றேன்.

நான் நண்பரிடம் நாம் தமிழில் எழுத யாராவது உதவுவார்களா எனக் கேட்டேன். அவர் அது சுலபம் என்றார். நான் எப்படி என்றேன். அவரின் நண்பர் ஒருவர் உள்ளதாகக் கூறினார்.

சென்ற ஞாயிறு மாலை புனித லூயிஸ் ஆலயத்தில் அவரின் நண்பரை சந்தித்தோம். அவரின் பெயர் ராபர்ட். அவர் ஒரு சில நிமிடங்களில் அதை சொல்லி தந்து விட்டார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி! எனது நீண்டநாள் அசை அன்று நிறைவேறியது. இனிமேல் நானும் இங்கே தமிழில் எழுதி மகிழ்வேன்.

இது நடந்தது ஆலயம் என்பதால் உடன் ஜெபம் செய்து கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

No comments:

Post a Comment