Friday 27 June 2014

                                                          தொடுவானம்                                                    டாக்டர் ஜி. ஜான்சன்

வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான்.
அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன்.
அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வா. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை அழகு பார்க்க கண்ணாடி உதவுவதுபோல் அகத்தை அழகு பார்க்க நாட்குறிப்பு உதவும் என்று அப்போது படித்தத்தின் விளைவே அந்த பழக்கத்தைக் கைக்கொண்டேன். அப்போது இளமைப் பருவம். அப்பாவுக்கு மட்டுமே தெரியாமல் அவற்றை ஒளித்து வைக்க நேரிட்டது. அதுபோல் இப்போதும் ஒளித்து வைத்து பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் இப்போதெல்லாம் அவ்வளவு விரிவாக எழுதுவது இல்லை.
என் இள வயது நிகழ்வுகளை நான் இப்போது திரும்பிப் பார்க்க என்னுடைய ஐம்பது வருட பழமை கொண்ட அந்த நாட்குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
அவற்றைக் கோர்வையாக சுவைபட வாசகர்களுக்குத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
" தென்றலைத் தீண்டிய தில்லை! தீயைத் தாண்டியுள்ளேன்! "
என்ற கலைஞரின் பராசக்தி வசனம்போல் என்னுடைய இளமைப் பருவத்தில் நான் அடைந்த அனுபவங்கள் அனைத்துமே சோக வரலாறுதான்! அவற்றை இன்றும் பெரும் பொக்கிஷமாகவே கருதுகிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகள் கொண்டதே என்னுடைய " தொடுவானம்".
" பேனாவும் ஸ்த்டெத்தஸ்கோப்பும் " படித்து மகிழ்ந்த எனது அருமை வாசகர் நண்பர்களே, இதோ இந்த புதிய " தொடுவானம் " தொடரிலும் என்னோடு பயணம் செய்ய வாருங்கள்.
இந்த அறிய வாய்ப்பை அன்புடன் நல்கிய தினக்குரல் ஞாயிறு மலர் ஆசிரியர் திரு. இராஜசோழன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
 

No comments:

Post a Comment